ஆசியா

குட்டையான ஆடைகளை அணிந்த மருமகள்.. மாமனார் செய்த செயல்!

மாமனார் ஒருவர், குட்டையான ஆடைகளை அணிந்த தனது மருமகள் மீது சூடான எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பத்தில் பெண் ஒருவர் குட்டையான ஆடைகளை அணிவதற்கு அவரது மாமானார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அத்துடன், மருமகளிடம் குட்டையான ஷார்ட்ஸ் அணிய வேண்டாம் என்றும் மாமனார் கடிந்து வந்துள்ளார்.

இதனால், சினமடைந்த குறித்த பெண் தனக்கு ஆடை சுதந்திரம் வேண்டும் என்று பதிலளித்துள்ள நிலையில் ஆத்திரமடைந்த மாமனார் மருமகள் மீது சூடான எண்ணெயை ஊற்றியுள்ளார்.இது தொடர்பாக அந்த தந்து கணவரிடம் முறையிட்டுள்ள நிலையில், அதற்கு அவரது கணவரும் ஏதும் கூறாது தந்தைக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பெண் , தனது கணவரை விவாகரத்து செய்வதற்கு எண்ணியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 13 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content