மலேசியாவில் பழம் சுவையில்லாததால் நபர் செய்த அதிர்ச்சி செயல்

மலேசியாவின் கூச்சிங் நகரில் நபர் ஒருவர் பழக்கடையின் சுருள்கதவைத் தம்முடைய காரால் இடித்தார்.
டுரியான் பழத்தின் தரம் திருப்திகரமாக இல்லை என்பதால் பழம் வாங்கிய கடைக்கு அந்த நபர் இந்த செயலை செய்துள்ளார்.
அவருக்கு நீதிமன்றம் 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 34 வயது Chiew Tze Wei தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டுச் சேதம் ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
ஒகஸ்ட் 11ஆம் திகதி காலை 5.30 மணியளவில் Kempas Heights பகுதியில் அவர் அந்தக் குற்றத்தைப் செய்துள்ளார்.
இருமுறை சுருள்கதவை இடித்ததாகத் திரு சியூ விசாரணையின்போது ஒப்புக்கொண்டார்.
கடைக்காரர் தம்மை ஏமாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் CCTV கேமராவில் பதிவானது.
(Visited 10 times, 1 visits today)