ஆசியா

மலேசியாவில் பழம் சுவையில்லாததால் நபர் செய்த அதிர்ச்சி செயல்

மலேசியாவின் கூச்சிங் நகரில் நபர் ஒருவர் பழக்கடையின் சுருள்கதவைத் தம்முடைய காரால் இடித்தார்.

டுரியான் பழத்தின் தரம் திருப்திகரமாக இல்லை என்பதால் பழம் வாங்கிய கடைக்கு அந்த நபர் இந்த செயலை செய்துள்ளார்.

அவருக்கு நீதிமன்றம் 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 34 வயது Chiew Tze Wei தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டுச் சேதம் ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

ஒகஸ்ட் 11ஆம் திகதி காலை 5.30 மணியளவில் Kempas Heights பகுதியில் அவர் அந்தக் குற்றத்தைப் செய்துள்ளார்.

இருமுறை சுருள்கதவை இடித்ததாகத் திரு சியூ விசாரணையின்போது ஒப்புக்கொண்டார்.

கடைக்காரர் தம்மை ஏமாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் CCTV கேமராவில் பதிவானது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!