இலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு – ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது .
2016 ஆண்டு கொழும்பில் கடந்த இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குரகல விகாரை தொடர்பில் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துக்களால் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவித்தமை தொடர்பில் வழக்கு ஞானசார தேரர் மீது தாக்கல் செய்யப்பட்டது.
(Visited 13 times, 1 visits today)