ஐரோப்பா முக்கிய செய்திகள்

சந்திரா புயல் : பிரித்தானியாவில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடல்!

பிரித்தானியாவை நெருங்கி வரும் சந்திரா (Chandra) புயல் காரணமாக நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு அயர்லாந்தில் கிட்டத்தட்ட 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் நாளைய தினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் M48 செவர்ன் (M48 Severn) பாலம் மூடப்பட்டுள்ளதுடன், பலத்த காற்று காரணமாக ஹம்பர் (Humber) பாலத்தின்  உயர் பக்கத்தில்  வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

சுமார் 10,000 சொத்துக்கள் தற்போது மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும், அதிகாலை முதல் தங்கள் நடவடிக்கைகளை அதிகரித்து வருவதாகவும் NIE தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில், பல பகுதிகளில் 50 மிமீ மழை பெய்யும் என்றும், முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இங்கிலாந்தின் தென்மேற்கில்  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தென்மேற்கு ரயில்வே சேவைகளில் சாத்தியமான இடையூறுகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!