இலங்கை

இலங்கையில் இணையவழி மோசடி: அண்மைய கைதுகளுக்கு சீனா பதில்

இலங்கையுடன் மோசடி தடுப்பு சட்ட அமலாக்க ஒத்துழைப்பை ஆழப்படுத்த சீனா எதிர்பார்த்துள்ளது என கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அறிக்கையில், ”சீனப் பிரஜைகள் உட்பட பல வெளிநாட்டு சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்ததாக அண்மையில் வெளியான செய்திகளை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

இந்த வழக்குகள் நமது இரு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமின்றி, சீனாவின் இமேஜையும் கடுமையாக சேதப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான பாரம்பரிய நட்புறவை பாதிக்கிறது.

சட்டத்திற்கு உட்பட்டு அவர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் சந்தேக நபர்களை உறுதியுடன் ஒடுக்குவதில் இலங்கை சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்களுக்கு சீனத் தூதரகம் முழு ஆதரவையும் வழங்குகிறது.

உலகமயமாக்கல் காலத்தில், எந்த நாடும் தனிமைப்படுத்தப்பட்டிருக்க முடியாது. சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்புறவைக் கொண்டிருக்கின்றன. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மிக நெருக்கமாக உள்ளது. நமது இரு நாட்டு மக்களுக்கும் நன்மைகளை கொண்டு வருவதற்கு நமது இரு நாடுகளும் எப்போதும் பரஸ்பரம் ஆதரவு அளித்து வருகின்றன.

See also  வைத்தியர் அருச்சுனாவிற்கு பிணை - பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என உறுதி

இலங்கையுடனான சட்ட அமலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இந்தப் பிரச்சனையை கூட்டாகக் கையாள்வதற்கு விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும் சீனா தயாராக உள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள், குறிப்பாக பொலிஸ் மற்றும் ஊடகவியலாளர்களிடமிருந்து புரிந்துணர்வையும் ஆதரவையும் பெற சீனா நம்புகிறது”.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 3 times, 3 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content