இலங்கை

இலங்கை பொலிஸ் சமூக ஊடக கணக்குகள் மீது சைபர் தாக்குதல்: வெளியான புதிய தகவல்

சைபர் தாக்குதல்களுக்கு இலக்கான இலங்கை காவல்துறையின் பல சமூக ஊடக தளங்கள் மீளமைக்கப்பட்டுள்ளன.

இலங்கை காவல்துறையின் யூடியூப், டிக்டோக், ‘எக்ஸ்’, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொலிஸ் யூடியூப் சேனலைத் தவிர அனைத்து சமூக ஊடக தளங்களும் மீட்கப்பட்டுள்ளன என்றார்.

சைபர் தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளை, YoTube சேனலை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக SSP மனதுங்க தெரிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!