இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதல் – பயணிகளின் கவனத்திற்கு!

ஐரோப்பாவின் சில முக்கிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக விமான பயணிகள் தாமதங்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சைபர் தாக்குதலானது செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெர்லினின் பிராண்டன்பர்க் விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் கையாளும் அமைப்புகளுக்கான சேவை வழங்கும் அமைப்பு வெள்ளிக்கிழமை (19) தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதேபோல் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையமும் பாதிப்பை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான லண்டன் ஹீத்ரோ விமான நிலையமும் , செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளுக்கான சேவை வழங்கும் அமைப்பை”தொழில்நுட்ப சிக்கல்” பாதித்ததாக கூறியது.

இந்நிலையில் இன்று (20.09) சர்வதேச பயணங்களை எதிர்கொள்ள நேரிடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

 

 

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்