இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல் – அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் இன்று இரவு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளிற்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் செப்டம்பர் 21ஆம் இரவு 10 மணிமுதல் செப்டம்பர் 22 அதிகாலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு தொடர்பான மேலதிக அறிவிப்புகளிற்காக உள்ளுர் ஊடகங்களையும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களையும் தொடர்ந்து அவதானித்த வண்ணமிருங்கள்.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அனைத்து அமெரிக்க பிரஜைகளையும்,மேலதிக தகவல்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளிற்காக ஸ்டெப்பில் Smart Traveler Enrollment Program (STEP) பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
(Visited 15 times, 1 visits today)