இலங்கை செய்தி

இலங்கையில் மருந்து உற்பத்தியில் முதலீடு செய்யும் கியூபா அரசு

இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூப தூதுவர் அண்ட்ரெஸ் மார்செல்லோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கியூபா அரசாங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இன்று (15) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான ஏறக்குறைய 65 வருட கால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்துதல், கியூபா உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கொசு ஒழிப்பு திட்டங்களை மீள ஆரம்பிப்பது, இலங்கையில் உள்ள பயிற்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவ மற்றும் விளையாட்டு கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்குதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கடந்த சில வருடங்களில் கியூபா பொருளாதார சவால்களை எதிர்கொண்ட போதிலும் கியூபாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கியூபா பிரதமருக்கு இலங்கை விஜயம் செய்ய உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் கியூபா அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content