செய்தி விளையாட்டு

CT Match 12 – அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன.

இந்நிலையில், இந்த போட்டி தொடரில் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 12வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 249 ரன்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் கண்டது.

நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் களம் இறங்கினர். இதில் ரச்சின் ரவீந்திரா 6 ரன்னிலும், வில் யங் 22 ரன்னிலும் அவுட் ஆகினர்.

நிலைத்து நின்று ஆடிய வில்லியம்சன் அரைசதம் அடித்த நிலையில் 81 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் புகுந்த சாண்ட்னெர் 28 ரன்னிலும்,மேட் ஹென்றி 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ-வில் முதல் இடத்திற்கு முன்னேறிய இந்தியா வரும் 4ம் தேதி துபாயில் நடைபெறும் அரையிறுதியில் ஆஸ்திரரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட நியூசிலாந்து வரும் 5ம் தேதி நடைபெறும் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.

(Visited 31 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!