ஆசியா

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு காத்திருக்கும் நெருக்கடி

சிங்கப்பூரில் இந்த ஆண்டு வெப்பநிலை மேலும் மோசமாகலாம் என வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

வருடாந்திரப் பருவநிலை மாற்ற மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட ஆய்வகம் இதனை குறிப்பிட்டுள்ளது.

சென்ற ஆண்டு நான்காவது முறையாகச் சிங்கப்பூரில் மிகக் கடுமையான வெப்பம் பதிவானது. 1997ஆம் ஆண்டுடிலும் 2015ஆம் ஆண்டிலும் அதே அளவு வெப்பம் பதிவானது.

ஆண்டு முழுதும் சராசரி வெப்பம் 28.2 டிகிரி செல்சியஸைத் தொட்டது. சென்ற ஆண்டு எல் நினோ பருவநிலை மாற்றம் ஏற்பட்டது.

அத்தகைய சூழலில் வருடாந்திர வெப்பம் அதிகரிப்பது வழக்கமாகும். வெப்பமண்டல பசிபிக் பகுதியில் எல் நினோ நீடித்தாலும் அது உலகின் பருவநிலையைப் பாதிக்கும்.

நீண்டகாலத்தில் உலகளாவிய பருவநிலை மாற்றம் இன்னமும் அக்கறைக்குரியதாக இருக்கிறது. வரும் மாதங்களில் வெப்பம் மிகுந்திருக்கும்; மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்;

வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்து, கோடையைச் சமாளிக்க அதிகமாகத் தண்ணீர் குடிக்கலாம், மெல்லிய ஆடைகளை அணியலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!