இலங்கை

இலங்கையிலிருந்து குற்றவாளிகள் தப்பிச் செல்ல தயாரிக்கப்படும் கடவுச் சீட்டுகள்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை போலியாகத் தயாரித்ததாக கூறப்படும் மூவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக இவை தயாரிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடவத்தை பிரதேசத்தில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஹோமாகம பிரதேசத்தில் போலி விமான பயணச்சீட்டை தயாரித்தார் எனக் கூறப்படும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்