இலங்கை

இந்தியா- இலங்கை இடையே கிரிக்கெட் போட்டி – பட்டாசு வெடிக்கப்பட மாட்டாதென அறிவிப்பு

மும்பையில் இன்று இந்தியா- இலங்கை இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், காற்றின் தரத்தை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் மோசமடைந்து வரும் காற்றின் தரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, இனிவரும் காலத்தில் மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட மாட்டாது என இந்திய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- இலங்கை இடையே போட்டி நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை டெல்லி பெரோஸ் ஷா கோட்லாவில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.

இந்த விடயம் குறித்து ICC-இற்கு அறிவித்துள்ளதாகவும் மும்பை மற்றும் டெல்லி போட்டிகளின் போது காற்று மாசை ஏற்படுத்தும் பட்டாசுகள் வெடிக்கப்படாது எனவும் இந்திய கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட தமது நிறுவனம் உறுதியாக உள்ளது எனவும் ரசிகர்கள் மற்றும் பங்குதாரர்களின் நலன்களை பாதுகாப்பதே தமது நோக்கம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்