இலங்கை

இ.தொ.காவில் கருத்து மோதல் உச்சத்தில்? இராஜினாமா செய்யும் ஜீவன்

மலையக அரசியலில் பிரதான கட்சியான இ.தொ.கா கடந்த பல வருடங்களாக அதன் செல்வாக்கை இழந்துவருகிறது.

கட்சிக்குள் இருப்பவர்கள் முறையாக தமது பணிகளை செய்யாமையால் கடும் முரண்பாடுகள் ஏற்பட்ட இவ்வாறு கட்சியின் செயல்பாடுகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன.

இந்த நிலையில் கட்சிக்குள் தற்போது கருத்து முரண்பாடுகளும் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இவ்வாறு கருத்து முரண்பாடுகள் அதிகரிப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு பாதகமாக அமையும் என்பதால் உள்ளக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பொறிமுறையொன்றை இ.தொ.கா வகுப்பது சிறந்ததாக இருக்கும் என அக்கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கட்சியின் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என அறிய முடிகிறது.

என்றாலும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் இடையே சில முரண்பாடுகள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

 

 

TK

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!