ஆசியா செய்தி

ஈரானிய பாப் பாடகருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

ஈரானைச் சேர்ந்த 37 வயது பிரபல பாப் பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூ. உடல் முழுவதும் பச்சை குத்தியிருக்கும் இவர் ‘டாட்டாலூ’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறார்.

இவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. விபசாரத்தை ஊக்குவித்தல், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தது உள்ளிட்ட வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளில் தேடப்பட்ட பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூ, 2018ம் ஆண்டில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்தார். பின்னர் துருக்கி போலீசார் அவரை 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின்னர் ஈரானில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அதில் தெய்வ நிந்தனை தொடர்பான வழக்கில் பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, பாடகருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல என்றும், மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!