பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) நிறுவனரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தனது மகன்களுடன் வாராந்திர வாட்ஸ்அப் அழைப்பை மேற்கொள்ள கோரிய மனுவை ராவல்பிண்டி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இம்ரான் கான் ஒரு மனுவை தாக்கல் செய்து, வாரத்திற்கு ஒருமுறை வாட்ஸ்அப் மூலம் தனது மகன்களுடன் உரையாட அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கைதிகள் தங்கள் உறவினர்களுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள எந்த சட்ட ஏற்பாடும் இல்லை என்று சிறை நிர்வாகம் உறுதிபடுத்தியது.
(Visited 12 times, 1 visits today)