விமலுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு – கைது செய்ய தயாராகும் பொலிஸார்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் இந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாகவே அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் அல் ஹுசைன், 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த போது, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)