கொழும்பில் ரயில் மோதி தம்பதியினர் உயிரிழப்பு

கொழும்பு – தெஹிவளை ரயில் மார்க்கத்தில் நடந்து சென்ற தம்பதியர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பதுளை, பதுலுபிட்டியவில் வசிக்கும் 58 மற்றும் 59 வயதுடைய தம்பதியர் ஆவர்.
சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 2 times, 1 visits today)