செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 7 ஆண்டாக யுவதியை கூண்டில் அடைத்துத் துன்புறுத்திய தம்பதி

அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாநிலத்தில் யுவதியை கூண்டில் அடைத்துத் துன்புறுத்திய தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தற்போது 18 வயதான யுவதியை 7 ஆண்டாக அவ்வாறு துன்புறுத்தியதாக தம்பதி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அரசாங்க வழக்கிறஞர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அந்தப் பெண் தம்பதியிடமிருந்து தப்பினார்.

38 வயது பிரண்டா ஸ்பென்சரும் 41 வயது பிராண்டன் மோஸ்லியும் 2018ஆம் ஆண்டு முதல் தம்மைத் துன்புறுத்தியதாக அந்தப் பெண் கூறினார்.

அந்தப் பெண்ணின் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி அவர் வீட்டில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 8ஆம் திகதி வீட்டிலிருந்து தப்பிய அந்தப் பெண் அண்டைவீட்டாரின் உதவியை நாடினார்.

வீட்டில் மிக மோசமான நிலையில் தாம் வைக்கப்பட்டிருந்ததாக அந்தப் பெண் அதிகாரிகளிடம் கூறினார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!