ஆசியா

சிங்கப்பூரில் மர்மமான முறையில் தம்பதி உயிரிழப்பு – குழப்பத்தில் பொலிஸார்

சிங்கப்பூரில் மர்மமான முறையில் தம்பதியினர் உயிரிழந்துள்ளமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிளாக் 93 ஹென்டர்சன் சாலையில் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு குடியிருப்பில் இயற்கைக்கு மாறாக இந்த மரணம் நடந்துள்ளது.

70 வயது முதியவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை ஒன்பதாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அதே வீட்டில் அவரது 67 வயது மனைவியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் 70 வயது முதியவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பின்னர் அவர் இறந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினருக்கு துர்நாற்றம் வீசியதை அடுத்து அவர்கள் பொலிஸார் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அந்த வீட்டிலின் தரையில் புழுக்கள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

அவரின் மனைவியின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்