இலங்கை

இலங்கையில் மீளவும் பரவும் கொரோனா வைரஸ் : ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் சோதனைகள் மேற்கொள்ளப்படாமையினால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெளிவருவதில்லை.

இந்நிலையில் கொவிட் தொற்று காரணமாக கம்பளை உலப்பனையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (24.12) உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சிசோசிஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொவிட் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,   இந்தியாவில் பரவும் புதிய வகை கொவிட் வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, தடுப்பூசி மூலம் பாதுகாப்பு உடலிலேயே உள்ளது.

அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!