ஆசியா

ஜப்பான் விமானப் பயணத்திற்கு முன்பு மதுபானம் அருந்திய விமானியாக சர்ச்சை

ஜப்பானின் Peach Aviation நிறுவனத்தின் விமானத்தைச் செலுத்துவதற்கு முன் விமானி மதுபானம் அருந்தியதற்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தை ஓட்டுவதற்குச் சுமார் 12 மணிநேரத்துக்கு முன்னர் மதுபானம் அருந்தக்கூடாது.

அந்த விதிமுறையை விமானி மீறியதாக Yomiuri Shimbun ஜப்பானிய ஊடகம் தெரிவித்தது. அவர் ஒரு லிட்டர் மதுபானம் குடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனால் ஜப்பானின் போக்குவரத்துத்துறை Peach Aviation நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.

விமானப் பயணத்துக்கு முன்னர் விமானி முறையான மதுபானச் சோதனையை மேற்கொள்ளவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டது.

அத்தகைய சம்பவங்கள் மீண்டும் நேராமல் இருக்க நிறுவனம் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி ஜப்பானியப்
போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!