சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்: மன்னிப்பு கோருமாறு அழுத்தம்!
மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கே.டி. லால்காந்தK.D. Lalkantha , உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசி அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியவை வருமாறு,
“மிகிந்தலை தலைமை விகாராதிபதிமீது தரக்குறைவான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டு அமைச்சர் லால்காந்த விமர்சித்துள்ளார்.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மிகிந்தலை தேரருக்கு இருக்கின்றது. எனினும், குற்றச்சாட்டுகளை தாங்கிக்கொள்ள முடியாமல், மகா சங்கத்தினரை படு மோசமாக விமர்சிப்பது ஏற்புடையது அல்ல.
இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தான் வெளியிட்ட கருத்தை அமைச்சர் மீளப்பெற வேண்டும். மிகிந்தலை தேரர் உட்பட மகாசங்கத்தினரிடம் அமைச்சர் லால்காந்த மன்னிப்பு கோர வேண்டும்..” – என்றார்
அதேவேளை, அமைச்சர் லால்காந்தவுக்கு எதிராக அரசியல் களத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. சில பௌத்த தேரர்களும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.





