ஐரோப்பா

தொடரும் போர் : உக்ரைனுக்கு “பிளாட்டினம் தரநிலை” பாதுகாப்பை வழங்கும் அமெரிக்கா!

ஐரோப்பிய நாடுகள் முன்வைத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்துள்ள நிலையில் உக்ரைன் மீளவும் சண்டைக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் போர் நிறுத்தத்தை உக்ரைன் ஜனாதிபதி  ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky)  நிராகரித்துள்ளார்.  இரண்டு நாட்களுக்குள் இறுதி அமைதி முன்மொழிவுகள் நிறைவடையும் என்றும்  ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில்  நேட்டோவின் பிரிவு 5 உடன் இணைக்கப்பட்ட “பிளாட்டினம் தரநிலை” பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ளது. ஆனால் இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.

ஆகவே உக்ரைன் முன்னெச்சரிக்கையாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பெலாரஷ்ய (Belarusian)  ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ ( Alexander Lukashenko ) மோதலை முடிவுக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் முந்தைய கொள்கைகள் போரை தடுத்திருக்கலாம் என்றும், ஒரு தீர்மானத்திற்கு அவரது தொடர்ச்சியான ஈடுபாடு மிக முக்கியமானது என்றும் பரிந்துரைத்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!