இலங்கை

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதிக்கு ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து!

மாலைத்தீவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்ட  மொஹமட் முய்சுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மொஹமட் முய்சுவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான மற்றும் நட்புறவுமிக்க இருதரப்பு உறவுகளை மேலும் பலமான மற்றும் பலதரப்பட்ட பங்காளித்துவமாக அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளை உள்ளடக்கிய பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மாலைதீவு புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!