இலங்கை செய்தி

சஜித் மேடையில் ஏற்பட்ட குழப்பம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மேடையில் இரண்டு தரப்பினருக்கு இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி பேரணியின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா மேடையில் இருந்து இறங்கும் வரை மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன, மேடைக்கு செல்ல மறுத்துள்ளார்.

லக்ஷ்மன் வசந்த பெரேரா தனது புகைப்படத்தையும், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவையும் கூட்டத்தையும் காட்டும் வகையில் மக்கள் மத்தியில் தனது பெயர் தொப்பிகளை விநியோகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் மேடையில் அமர்ந்திருந்ததால் கோபமடைந்த ரோஹினி, லக்ஷ்மன் வசந்த மேடையை விட்டு வெளியேறும் வரை மேடைக்கு வரமாட்டேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருவதற்கு முன்னதாகவே வசந்த பெரேரா மேடையை விட்டு வெளியேறியுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை முன்னிறுத்திக் கடுமையாகக் கருத்து தெரிவித்த அவர், பார் உரிமையாளர்களுக்கு, தனது மேடையில் இடமில்லை என தலைவர் சஜித் பிரேமதாச கூறியதாக ரோஹினி தெரிவித்தார்.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!