ஐரோப்பா

கொசோவோவில் நேட்டோ வீரர்களுக்கும், செர்பிய இனத்தவருக்கும் இடையில் மோதல்!

கொசோவோவில் நேட்டோ தலைமையிலான அமைதி காக்கும் படைக்கும், செர்பியர் இனத்தவருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 30 தஇற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

வடக்கு கொசோவோவில் உள்ள நகராட்சிகளில் ஒன்றின் அலுவலகங்களைக் கைப்பற்ற செர்பியர்கள் முயன்றுவருகின்றனர்.  அங்கு அல்பேனிய இன மேயர்கள் கடந்த வாரம் தங்கள் பதவிகளை ஏற்றனர். இதனையடுத்து மோதல் வெடித்தது.

இந்த மோதலில், 11 இத்தாலிய வீரர்கள், 19 ஹங்கேரிய வீரர்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பிரிஸ்டினாவிற்கு வடக்கே 45 கிலோமீட்டர் (28 மைல்) தொலைவில் உள்ள Zvecan நகராட்சியில் செர்பியர்கள் நேட்டோ துருப்புக்களுடன் மோதியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கூட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் செய்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!