இலங்கை

தம்பலகாமத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் பலி!

திருகோணமலை- தம்பலகாமம், பாலம்பட்டாறு பகுதியில் பேருந்து நடத்துனர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் திருகோணமலை 05ம் கட்டை பகுதியில் வசித்து வரும் லலித்குமார் (43வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, திருகோணமலையிலிருந்து கந்தளாய் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் பாலம்பட்டாறு பகுதியிலுள்ள கோயில் உண்டியலுக்கு காசி போடுவதற்காக பேருந்தில் இருந்து இறங்கி மீண்டும் ஏறுவதற்கு முற்பட்டபோது தவறி விழுந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தம்பலகாமம் பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்   சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்து தொடர்பில் தம்பலகாமம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!