பிரித்தானியாவில் கட்டாயமாகும் இராணுவ சேவை : தமிழ் இளைஞர்களுக்கும் அழைப்பு?

பிரித்தானியாவில் மீண்டும் இராணுவ சேவையை கட்டாயமாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர் தமிழர்கள் உள்பட பல இளைஞர்கள் கட்டாயமாக இராணுவ சேவையில் இணைய வலியுறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
பிரிட்டனின் குறைந்து வரும் வீரர்களின் எண்ணிக்கை தேசிய பாதுகாப்பு நிபுணர்களிடையே எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் தளபதி ஒருவர் தற்போது 72,000 க்கும் மேற்பட்ட வழக்கமான படை வீரர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றுகின்றனர் – இது நெப்போலியன் போர்களுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையாகும் என குறிப்பிடுள்ளார்.
இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு பிரபலமான தீர்வு, கட்டாய இராணுவப் பயிற்சியை மீண்டும் அறிமுகப்படுத்துவதாகும், அதாவது சாதாரண குடிமக்கள் கட்டாய இராணுவப் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு எதிர்காலப் பணியமர்த்தலுக்காக ‘காத்திருப்பில்’ வைக்கப்படுவார்கள்.
ஐரோப்பாவின் பல நாடுகள் இதைச் செய்கின்றன, அவற்றில் டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகியவை அடங்கும்.
ஆனால் 1963 இல் தேசிய சேவை முடிவடைந்ததிலிருந்து இங்கிலாந்தில் எந்த வகையான கட்டாய இராணுவ சேவையும் இல்லை.
தற்போது ரஷ்யா – உக்ரைன் போர், அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றம் நேட்டோ படைகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் ஆகியவை பாதுகாப்பு அச்சுறுத்தலை கொண்டுவந்துள்ளது.