செய்தி தமிழ்நாடு

போக்குவரத்து விதிகளை மீறியதாக பிரபல யூடியூபர் சித்து மீது புகார்

பிரபல யூடியூபர் விஜே சித்துவுக்கு எதிராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஷெரின் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், விஜே சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் அஜாக்கிரதையாகவும், செல்போனில் பேசியபடியும் வாகனத்தை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், வீடியோவில் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இதுதொடர்பான வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை பார்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும்.

போக்குவரத்து விதிகளை மீறிய விஜே சித்து மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள சென்னை போலீசார், “குறிப்பிடப்பட்டுள்ள வீடியோ கடந்த 12.11.2023 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவினை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content