இலங்கை செய்தி

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்றது.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது , ஈச்சலம்பற்று கால்நடை வைத்திய பிரிவை சேர்ந்த 318 பயனாளர்களுக்கும், குச்சவெளி கால்நடை வைத்திய பிரிவை சேர்ந்த 88 பயனாளர்களுக்குமாக மொத்தம் 406 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்மூலம், திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட 968 பண்ணையாளர்களுக்கு, மொத்தமாக சுமார் 557 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர், அரச கால்நடை வைத்தியர்கள் மற்றும் அரச கால்நடை போதனாசிரியர்கள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!