இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஜெர்மனியில் விடுமுறை பெற்று வீடுகளில் முடங்கும் ஊழியர்களால் நெருக்கடியில் நிறுவனங்கள்

ஜெர்மனியில் ஊழியர்கள் சுகயீனம் காரணமாக அதிகளவான விடுமுறைகளை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வேலையிடங்களுக்கு செல்லாமல் பலர் சுகயீன விடுறையில் வீடுகளில் தங்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு நோய்களை குறிப்பிட்டு விடுமுறை பெறுவதாகவும் சிலர் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் விடுமுறைக்கான காரணமாக குறிப்பிட்டுள்ளனர்.

ஊழியர்களின் விடுமுறை அதிகரிப்பால் தொழில் வழங்குநர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் டிசம்பர் மாதம் வரை தொழில் செய்யும் ஒருவர் சராசரியாக 17.7 நாட்கள் சுகயீனம் காரணமாக விடுமுறைகளை எடுப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2023 மற்றும் 2020 ஆண்டுகளில் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 17.4 நாட்கள் விடுமுறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் 13.2 நாட்களாகவும், 2019 ஆண்டில் 14.1 நாட்களாக விடுமுறை பெற்றவர்களின் சராசரியாக காணப்பட்டுள்ளது.

(Visited 48 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்