இலங்கை

நீதிமன்ற தடை உத்தரவை மீறியும் திருகோணமலையில் தியாகி திலிபனின் நினைவேந்தல் நிகழ்வு

தமிழ் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (26) திருகோணமலை தபால்கந்தோர் வீதியில் அமைந்துள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் நூற்றுக்கனக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி நினைவு கூரப்பட்டது.

திருகோணமலை நீதிமன்றத்தினால் பொது அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பேருக்கு பொலிஸார் தடை உத்தரவு கடிதத்தை வழங்கிய போதும் தடையாளர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் இந்த நிகழ்வை நடாத்தியதுடன் நீதிமன்ற தடைஉத்தரவை பாதுகாக்கும் வகையில் பெரும்தொகையான பொலிஸார் குவிக்கபட்டிருந்போதும் நூற்றுக்கனக்கான பொதுமக்களும் முன்னாள் போராளிகளின் உறவினர்களும் ஒன்றுகூடி மெழுகிவர்த்தி தீபம் ஏற்றி மலர்கள் தூவி மேற்படி நினைவுகூர்தலை மேற்கொண்டனர்.

திருகோணமலை-துறைமுக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குளக்கோட்டன் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றபோதும் நூற்றுக்கனக்கான பொலிசார் மற்றும் வாகனங்கள் குவிக்கப்பட்டு இருந்தன.திருகோணமலை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு பொலிஸ் அதிகாரி ஒருவரால் வாசிக்கப்பட்துடன்,திருகோணமலை நீதிமன்ற கட்டளைக்கு அமைய 1979ஆம் 15ம் இலக்க குற்றவியல் பிரிவு 106/1 பிரகாரம் ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நிறுத்துமாறு உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது.

திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜே.எஸ்.ரணவீர அவர்களின் பொலிஸ் பிரிவிலுள்ள குளக்கோடட்டன் மண்டபம் மற்றும் காந்தி சுற்றுவட்டம் ஆகிய இடங்களில் மறைந்த விடுதலை புலி அமைப்பின் போராளி தியாகி திலிபனின் நினைவேந்தல் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் தியாகி திலிபனை நினைவுகூரும் வகையில் நினைவுகளை நடாத்துவது சிங்கள, முஸ்லிம்,தமிழ் இனங்களுக்கு இடையே முரண்பாட்டினை உருவாக்கி தேசிய ரீதியில் இனக்கலவரங்களை உண்டாக்க வழிவகுக்கும் என்பதால் இதுபோன்ற நினைவு கூரல் போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் தடைசெய்ய வேண்டும் என்ற நீதிமன்ற கட்டளைக்கு அமைய தடைவிக்கின்றோம் என அத்தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் திருமலை தமிழ் தேசிய பேரவை தலைவர் ஜெரோம் உறுப்பினர் ரமேஸ் நிக்கலஸ் மூதூர் மாற்றுத்திரனாளி சங்க தலைவர் சுஜிதபிரியா,ஜனதா பெரமுன ஒன்றிய
தலைவர் கிருஸ்னபிள்ளை பிரசாந் மற்றும் கந்தையா காண்டீபன் ஆகியோருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்