இலங்கை

வலுவடைகிறது கொழும்பு, வாஷிங்டன் உறவு!

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தகம் உட்பட இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கலாநிதி போல் கபூரை சந்தித்து பேச்சு நடத்திய வேளையிலேயே இது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் பெதானி போலஸ் மொறிசனும் கலந்து கொண்டிருந்தார்.

இலங்கை தூதரகத்தின் பிரதி தலைவர் மதுகா விக்ரமாச்சி, தூதரக அதிகாரி சதுரி பெரேரா, பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் துமிந்து அபேவிக்ரம ஆகியோரும் கலந்து இச்சந்திப்பில் பங்கேற்றனர் என தனது முகநூல் பக்கத்தில் மஹிந்த சமரசிங்க பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பின் வர்த்தக போரில் இலங்கையும் சிக்கியது. எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளால் வரி குறைப்பு இடம்பெற்றது. இதில் தூதுவர் மமஹிந்த சமரசிங்க முக்கிய பாத்திரத்தை வகித்தார்
.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இராஜதந்திர துறையில் மறுசீரமைப்பு இடம்பெற்றது. எனினும், மஹிந்த சமரசிங்கவின் சிறப்பான சேவை கருதி, அவரது பதவியில் மாற்றம் மேற்கொள்ளவில்லை.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!