திசை காட்டி எம்பி-க்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்
தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை (Jagath Manuwarna) கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு இரண்டு வழக்குகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சந்தேக நபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி தனது கட்சிக்காரர் தேசிய காணி விநியோக திட்டத்தில் பங்கேற்றதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று கூறியதையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
(Visited 5 times, 1 visits today)





