செய்தி

ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை விதித்த கொழும்பு நீதிமன்றம்

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக 1500 ரூபா அபராதம் விதிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 16, 2016 அன்று, கிருலப்பனையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை துடைத்தெறிய வேண்டும்” என்று கூறினார். ஞானசார தேரர் அறிவித்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டதாக குற்றவியல் சட்டத்தின் 291ஆவது பிரிவின் கீழ் பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!