இலங்கை செய்தி

இலங்கையில் சடுதியாக அதிகரித்த தேங்காய் விலை மற்றும் அரிசி விலை

இலங்கை சந்தையில் தேங்காய் மற்றும் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பிர் நுகர்வோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதேநேரம், கட்டுப்பாட்டு விலையை மீறியும் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தநிலையில் அரிசி தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு 70,000 மெற்றிக் டன் நாடு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.

அதற்கமைய, அதற்கான விலை மனுக் கோரல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளது.

பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!