இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

உலகின் வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள் – கடல் மட்டம் உயர்வு

உலகின் பனிப்பாறைகள் முன்னெப்போதையும் விட வேகமாக உருகி வருகின்றன.

இதனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 2 சென்டி மீட்டர் கடல் மட்டம் உயர்வு ஏற்பட்டுள்ளது.

மனித செயல்பாடுகளால் வெப்பநிலை அதிகரித்துள்ளமையே இதற்கு காரணம் என ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

பனிப்பாறைகள் தொடர்ச்சியான காலநிலை மாற்றத்தின் சிறந்த குறிகாட்டிகளாகும். 35 ஆராய்ச்சி குழுக்களை உள்ளடக்கிய ஒரு சர்வதேச முயற்சியின் மூலம் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சி, 2000 மற்றும் 2023 க்கு இடையில் உலகின் பனிப்பாறைகள் மொத்தமாக சுமார் 6.542 டிரில்லியன் டன் பனியை இழந்துள்ளன.

இதனால் உலக கடல் மட்டத்தில் 18 மில்லி மீற்றர் உயர்வு ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

இந்த விரிவான அறிவியல் பகுப்பாய்வு, Glambieஎனப்படும் பனிப்பாறை நிறை சமநிலை இடை ஒப்பீட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாகும்.

இது கள அளவீடுகள் மற்றும் ஆப்டிகல், ரேடார் மற்றும் லேசர் செயற்கைக்கோள் பயணங்களிலிருந்து கிடைக்கும் தரவை ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்கிறது.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி