இந்தியா

ஒடிசாவில் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் 10ம் வகுப்பு மாணவன் மரணம்!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்சிதர் வித்யாபீடத்தைச் சேர்ந்த 15 வயதான 10ஆம் வகுப்பு மாணவன் சுமந்த தாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த அக்டோபர் 7ம் திகதி ஆசிரியரால் மாணவன் அடிக்கப்பட்டான். வீடு திரும்பிய மாணவன் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார்.

தனது அனுமதியின்றி சைக்கிளை எடுத்துச் சென்றதாக சக மாணவர் முறைப்பாடு செய்ததையடுத்து, ஆசிரியர் தனது மகனை அடித்ததாக சுமந்த தாஸின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!