இரு குழுக்களிடையே மோதல் – கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை!

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று (03) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறங்குதுறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர், கொலையை செய்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஈச்சலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)