இலங்கை

திருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : 07 பேர் உயிரிழப்பு!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பில் ஏழு பேர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நட்பு ரீதியாக மது அருந்தி கொண்டிருந்த வேளையில் நொச்சிக்குளம்- சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் வால்வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் இன்று (15.04) அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

20 பதுக்கும் 25க்கும் இடைப்பட்ட நான்கு இளைஞர்களே இவ்வாறு படுகாயம் அடைந்தனர்.

இதேவேளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மஹதிவுல்வெவ பிரதேசத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர் தனது குடும்பத்தாருடன் முற்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரினால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது காயமடைந்த தாயும் மகனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெப்ரவரி நான்காம் திகதி சுதந்திர தினத்தன்று சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உரிய நேரத்திற்கு கடமைக்கு வராதமையினால் பொறுப்பதிகாரி எச்சரிக்கை விடுத்தமையினால் மது போதையில் இருந்த குறித்த வீரர் முற்சக்கர வண்டியில் சென்ற குடும்பத்தினரை தாக்கியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 17 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!