வங்கதேச காவல்துறையினர் மற்றும் ஹசீனா ஆதரவாளர்கள் இடையே மோதல் – 3 பேர் பலி

வங்கதேச பாதுகாப்புப் படையினருடன் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர், இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
தெற்கு நகரமான கோபால்கஞ்சில் வன்முறை இடம்பெற்றுள்ளது, ஹசீனாவின் அவாமி லீக் உறுப்பினர்கள் தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) பேரணியை சீர்குலைக்க முயன்றனர்.
புதிய கட்சியின் எழுச்சியை நினைவுகூரும் “தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அணிவகுப்பு” நிகழ்ச்சியில் NCP தலைவர்கள் வந்தபோது, ஹசீனா ஆதரவு ஆர்வலர்கள் தடிகளுடன் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரைத் தாக்குவதையும் வாகனங்களுக்கு தீ வைப்பதையும் காணொளிகள் காட்டுகின்றன.
இறந்தவர்களில் ஒருவர் ராம்ஜன் சிக்தர் என்றும் மற்ற இருவரையும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
மாவட்டத்தில் அதிகாரிகள் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதிக்கப்பட்டுளள்து.