சிறையிலிருந்து தப்பிக்க 4 ஆண்டுகளில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்த சீனப் பெண்

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த சென் ஹாங் என்ற புனைப்பெயரில் அறியப்படும் பெண் ஒருவருக்கு 2020ம் ஆண்டில் மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.
அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார்.
இப்படி ஒரு விலக்கு இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது மீண்டும் மீண்டும் கர்ப்பமாகி வந்துள்ளார்.
இதன் விளைவாக, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பமாகி சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார்.
தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரியிடம் கொடுத்துள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில், இதுபோல் தொடர்ந்து கர்ப்பம் தரிப்பதை அறிந்து கொண்டனர். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.