உலகம் செய்தி

சீனாவின் அச்சுறுத்தல் – பாதுகாப்பு செலவீனத்தை அதிகரித்த தைவான்!

சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு செலவீனத்தை அதிகரிக்க தைவான் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய $1.25 டிரில்லியன் ($61.2 பில்லியன்) துணை பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-டே (Lai Ching-te) இன்று தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கப்படும் தைவானை அதன் சொந்த பிரதேசமாகக் கருதும் சீனா, கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது உரிமைகோரல்களை உறுதிப்படுத்த இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

இதனை கடுமையான மறுத்துவரும் தைவான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் பாதுகாப்பு கோரியுள்ளது.

இதனால் அண்டை நாடுகளுடனான உறவுகளை சீனா பகைத்துக்கொண்டுள்ளது. உதாரணமாக சமீபத்தில் ஜப்பானுடனான உறவு பலவீனமடைந்ததை  சுட்டிக்காட்டலாம்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தைவான் ஜனாதிபதி, T$1.25 டிரில்லியன் தொகுப்பை பாதுகாப்பு செலவீனத்திற்காக ஒதுக்கியுள்ளதாக அறிவித்ததுடன், ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுக்கும் போது சமரசம் செய்ய முயற்சிப்பது “அடிமைத்தனத்தை” மட்டுமே கொண்டு வந்துள்ளதாக வரலாறு நிரூபித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!