சீனாவின் திடீர் நடவடிக்கை – தைவானின் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த ட்ரோன்கள்!

சீன இராணுவக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் தைவானைச் சுற்றியுள்ள வான்வெளி மற்றும் நீர்நிலைகளில் நுழைந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தைவானின் சமீபத்திய அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாக இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
சில ட்ரோன்கள் தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்தன, ஆனால் எந்த மோதல்களும் பதிவாகவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஸ
தைவான் நிலைமையைக் கண்காணித்து, விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் கடலோர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்புகளை நிறுத்தியது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.
(Visited 1 times, 1 visits today)