இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சீனா துணை நிற்கும்!

கொழும்பு வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi , இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று காலை நாட்டுக்கு வந்த சீன வெளிவிவகார அமைச்சருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. சீன தூதுரக அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath நன்றி தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குரிய திட்டங்கள் பற்றியும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர் என தெரியவருகின்றது.

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டுள்ளன.

இலங்கையின் மீள் கட்டமைப்பு பணிகளுக்கு சீனா உதவி அளிக்கும் என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் இந்திய பிரதமரின் விசேட பிரதிநிதியாக கொழும்பு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!