ஆசியா

“கோல்டன் டோம்” ஏவுகணை திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தும் சீனா : “உலகளாவிய சமநிலை சீர்குலைவதாக சுட்டிக்காட்டு!

“கோல்டன் டோம்” ஏவுகணை பாதுகாப்பு கேடய திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “உலகளாவிய மூலோபாய சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மையை” குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக சீன வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இந்த திட்டத்தை கைவிடுமாறும் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

ஓவல் அலுவலக மாநாட்டில் டிரம்ப் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இந்த திட்டத்தை அறிவித்தனர். அமெரிக்க நிர்வாகம் ஒரு ஏவுகணை பாதுகாப்பு குடையை நிறுவ முயற்சிப்பதாக வெளியான செய்திகளை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

உலகின் பிற பக்கங்களிலிருந்து ஏவப்பட்டாலும், விண்வெளியில் இருந்து ஏவப்பட்டாலும் கூட ஏவுகணைகளை இடைமறிக்கும்” திறன் கொண்டதாக இந்த கோல்டன் டோம் திட்டம் இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் சுமார் $175 பில்லியன் செலவாகும், மேலும் மூன்று ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று டிரம்ப் கூறினார்.

இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், முன்மொழியப்பட்ட கேடயம் “விண்வெளியை ஒரு போர் மண்டலமாக மாற்றும் மற்றும் விண்வெளி ஆயுதப் போட்டியை உருவாக்கும் மற்றும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பை உலுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!