May 10, 2025
Breaking News
Follow Us
இலங்கை

ஆய்வு கப்பலை இலங்கையில் நிறுத்துவதற்கு அனுமதி கோரும் சீனா!

சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் சிக்ஸ்’ இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் சீனா அனுமதி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த ஆய்வுக் கப்பல் வரும் திகதி குறித்து சீன அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மேலும் அந்த கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன ஆய்வுக் கப்பல் ‘ஷீ யான் சிக்ஸ்’ வரும் அக்டோபரில் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நங்கூரமிடப் போவதாகவும், அந்தக் கப்பல் தென்னிந்தியப் பெருங்கடல் பகுதியில் விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்றும் இந்திய ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.

எவ்வாறாயினும், சீன ஆய்வுக் கப்பல் வருகை தொடர்பில் கவலையடைந்துள்ள இந்திய அரசாங்கம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்