ஆசியா

இரட்டைச் சூறாவளியை எதிர்கொள்ள தயாராகும் சீனா!

சீனாவின் கிழக்குக் கடற்பகுதி இரட்டைச் சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகிறது.

இவ்வார இறுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து கடுமையான புயலும் கனத்த மழையும் ஏற்படலாம் என குறிப்பிடப்படுகின்றது

சீனாவின் தெற்குப் பகுதியிலிருக்கும் ஹைனான் பகுதியில் பெருமழை எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு நாட்டைப் பாதிக்கும் முதல் வெப்பமண்டலச் சூறாவளி இதுவாகும். தைவானின் வடக்குப் பகுதியை இந்த வாரம் கெமி புயல் கடக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

மணிக்குச் சுமார் 180 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசும். புதன்கிழமையும் வியாழக்கிழமையும் கெமி புயலை எதிர்நோக்கியிருப்பதாகத் தைவானின் வானிலை நிறுவனம் தெரிவித்தது.

ஷாங்க்சி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் வெள்ளிக்கிழமை இரவு பாலம் இடிந்துவிழுந்தது.

இதனால் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேரின் வாகனங்கள் ஆற்றில் மூழ்கியபிறகு அவர்களை இன்னமும் காணவில்லை. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!