ஓட்டுநர் இல்லாத மின்சார சுரங்க லொரிகளை அறிமுகப்படுத்தியது சீனா!

சீனாவில் 5ஜி அதிவேக இண்டர்நெட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஓட்டுநர் இல்லாத மின்சார சுரங்க லொரிகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.து
செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் 5ஜி அதிவேக இண்டர்நெட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஓட்டுநர் இல்லாத மின்சார சுரங்க லொரிகளை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
மங்கோலியாவில் உள்ள யிமின் திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கத்தில் 100 மின்சார சுரங்க லொரிகள் இயக்கப்படுகின்றன.
இந்த லொரிகளில் ஓட்டுநர் இல்லை, ஸ்டீரிங் இல்லை, கேபின்கூட கிடையாது. ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 90 டன் எடையை 60 கிலோமீட்டர் தூரம் வரை எடுத்துச்செல்லக்கூடிய திறன் கொண்டவை என, இந்த லொரியை உருவாக்கியுள்ள ஹுவானெங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)